×

சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்த சஷ்டி கவசம் படிக்கும் விஜயகாந்த்!!

கந்த சஷ்டி கவசம் மீது இந்துக்களுக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு. எந்த ஒரு நற்காரியங்களையும் கந்த சஷ்டி கவசத்தை பாடியே தொடங்குவர். ஒவ்வொரு நாளும் கந்த சஷ்டி கேட்டு எழுவோர் தான் இங்கு அதிகம். ஆனால் இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை பதிவிடும் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தி வீடியோ பதிவிட்டதாகம், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ்
 

கந்த சஷ்டி கவசம் மீது இந்துக்களுக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு. எந்த ஒரு நற்காரியங்களையும் கந்த சஷ்டி கவசத்தை பாடியே தொடங்குவர். ஒவ்வொரு நாளும் கந்த சஷ்டி கேட்டு எழுவோர் தான் இங்கு அதிகம். ஆனால் இந்துக்களின் கடவுளர்கள் மற்றும் புராணங்கள் தொடர்பாக பல்வேறு வீடியோக்களை பதிவிடும் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்தி வீடியோ பதிவிட்டதாகம், சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசன் உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கந்த சஷ்டி புத்தகம் கையில் ஏந்தி அதனை படிப்பது போன்று ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் விஜயகாந்த், “வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன். ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். #தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா” எனக் குறிப்பிட்டுள்ளார்.