#BREAKING பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி- தீர்மானம் நிறைவேற்றம்
சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி தொகுதிகளில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்யும் வகையில் இன்று நடைபெற்ற அந்த தொகுதியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை ஆதவ் அர்ஜுனா முன்மொழிய, கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழிமொழிந்தார். ஆதவ் முன்மொழிந்த தீர்மானத்தை அனைவரும் ஏற்பதாக ஆனந்த் அறிவித்தார்.
கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் வளர்ச்சி இல்லாத, வறுமை மிகுந்த தொகுதியில்தான் நிற்பேன் என விஜய் கூறினார். விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தீர்மானம் போடுகிறேன். கொளத்தூர், ஆர்.கே.நகர் என வடசென்னையில் ஒரு தொகுதியில் நிற்க வேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பமாக இருக்கும்” என்றார்.