பிரபல இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்..!!
திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 17) காலமானார். அவருக்கு வயது 68. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிரிழந்துள்ளார்.
ஒளிப்பதிவாளராக தன் வாழ்க்கையை தொடங்கிய வேலு பிரபாகரன், அதன் பின்னர் இயக்குநர், நடிகர் என திரையுலகில் பல அவதாரங்களை எடுத்தார். பன்முகக்கலைஞரான இவர், முதன் முதலில் 1989ல் வெளியான ‘நாளைய மனிதன்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல ப்டங்களை இயக்கியுள்ளார்.
அதேபோல் நடிகராகவும் காதல் கதை, ஒரு இயக்குநரின் காதல் டைரி, பீட்ஸா 3 , கஜானா உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். வேலு பிரபாகரன் மறைவையொட்டி திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.