×

"தென்னகத்தின் வீரத்தைப் பறைசாற்றிய கட்டபொம்மனுக்கு  எம் வீரவணக்கம்" - முதல்வர் ஸ்டாலின் ட்வீட் 

 

வீரத்தையும், விவேகத்தையும் தன்னகத்தே கொண்டவர்  வீரபாண்டிய கட்டபொம்மன். சுதந்திர இந்தியாவுக்காக அரும்பாடுபட்டவர்களில் முதன்மையானவராகவும், முன்னோடியாகவும் விளங்கியவர் வீரபாண்டிய கட்டபொம்மன்.  

ஆளவந்த ஆங்கிலேயரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தி சுதந்திர விதையை விதைத்த அவர், ”வானம் பொழியுது, பூமி விளையுது, மன்னன் காணிக்கு வரி ஏன் செலுத்தவேண்டும்?” என்று வினவி தூக்கு கயிறை பரிசாக பெற்று தன்யின்னுயிரை விட்ட  வீரபாண்டிய கட்டபொம்மனின் 264ஆவது பிறந்தநாளான இன்று கொண்டாடப்படுகிறது.