“மக்களை சந்தித்து ஆறுதல் கூறாமல் சிபிஐ விசாரணை கேட்பது அயோக்கியத்தனம்..”- வன்னி அரசு
Sep 28, 2025, 13:03 IST
இந்த மரணங்களின் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள நீதிமன்றத்தை நாடுகிறார் விஜய் என விசிக துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு சாடியுள்ளார்.
இதுதொடர்பாக வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில், “நடிகர் விஜய் அவர்களை காணவந்த ரசிகர்களும் தொண்டர்களுமாக 39 பேர் மரணித்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. எமது தலைவர் #எழுச்சித்தமிழர் உள்ளிட்ட தலைவர்கள் கரூரை நோக்கி பயணித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால்,நேற்று கரூரிலிருந்தே பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறாமல் அவசரம் அவசரமாக எஸ்கேப்பாகி சென்னை வந்து விட்டார். இதுவரை தவெகவின் அடுத்த கட்ட தலைவர்கள் கூட பாதிக்கப்பட்ட மக்களோடு நிற்கவில்லை.