×

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வாரத்தில் 4 நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கம்!!
 

 

கூடுதல் நெரிசலைக் குறைக்க சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே வந்தேபாரத் சிறப்பு ரயில்கள் (வாரத்தில் 4 நாட்கள்) இயக்கப்பட உள்ளன. 

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் ரயில் பயணிகளுக்கு சொகுசு மற்றும் விரைவான பயணம் ஆகியவற்றை அளித்து வருகிறது.

 வருகிற ஜூலை 11ஆம் தேதி 12, 13 ,14 ,18, 19 ,20, 21 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மதியம் 1:50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக அதே தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து 2:20 புறப்படும் வந்தே பாரத் ரயிலானது இரவு 11 மணிக்கு சென்னை வந்தடையும்.