"விஜய்க்கு சரித்திரம் வாய்ந்த நினைவு பரிசை வழங்கினேன்"- புகழேந்தி
அம்பேத்கர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், அம்மா வழியில் திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவராக, மக்கள் போற்றும் முதல்வராக, இளைஞர்களின் எழுச்சி நாயகனாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தொண்டர்களை காத்து அரவணைத்து ஏற்றுக்கொண்ட புரட்சித் தளபதி அவர்களை நேரில் சந்தித்து சரித்திரம் வாய்ந்த நினைவு பரிசு வழங்கினேன் என புகழேந்தி கூறியுள்ளார்.
அண்மையில் தவெகவில் இணைந்த புகழேந்தி தனது முகநூல் பக்கத்தில், “பேரன்புடையீர் வணக்கம்,வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் அண்ணல் அம்பேத்கார், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவராக மக்கள் போற்றும் முதல்வராக இளைஞர்களின் எழுச்சி நாயகனாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய தொண்டர்களை காத்து அரவணைத்து ஏற்றுக் கொண்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் மாண்புமிகு தமிழக முதல்வருமான புரட்சித் தளபதி அவர்களை நேரில் சந்தித்து அவர்கள் வாழ்த்துக்களை பெற்று அவர்கள் அன்புடன் அணிவித்த சால்வையும் பெற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த போது எடுத்த படம்.
மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு சரித்திரம் வாய்ந்த நினைவு பரிசு வழங்கினேன். அனைவரையும் அன்புடன் அரவணைத்து சரித்திரம் வாய்ந்த வரலாற்று நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தளபதி முன்னிலையில் இனிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்த கழகத்தின் பொதுச் செயலாளரும் மாண்புமிகு அமைச்சருமான என் ஆனந்த் அவர்களுக்கும் அவருடன் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து வணங்குகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.