×


ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ததை பாக்கியமாக கருதுகிறேன் - அமித் ஷா தமிழில் டுவீட்

 

ராமேஸ்வரம் கோவிலில் ஆரத்தி மற்றும் அபிஷேகம் செய்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் பாஜக கட்சியை பலப்படுத்தும் நோக்குடன் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்கிறார்.  இந்த நடைபயணத்தை அண்ணாமலை  ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று தொடங்கினார். இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று  காலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.