×

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்த அமித் ஷா!

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 'மிக்ஜாம்' புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வங்கக்கடலில் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் மாண்புமிகு ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் இன்று (4.12.2023), மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.அப்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.