வெளிநாடு வாழ் இந்தியர்களும் இனி இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்- நிர்மலா சீதாராமன்
Feb 1, 2026, 12:10 IST
வெளிநாடு வாழ் இந்தியர்களும் இனி இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள்
- நகராட்சி பணப் பத்திரம் வெளியிட்டு நிதியை திரட்டி ரூ.100 கோடியில் திட்டம்
- ஐஐஎம் உதவியுடன் 20 சுற்றுலாத் தளங்களில் 10,000 சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்
- வெளிநாடு வாழ் இந்தியர்களும் இனி இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம்
- வரும் ஆண்டில் 1.5 லட்சம் சுகாதார பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்
- அடுத்த 5 ஆண்டுகளில் ரேடியாலஜி, அனஸ்தீசியா உள்ளிடக்கிய 1 லட்சம் மருத்துவ பணியாளர்களை உருவாக்க திட்டம்
- நாடு முழுவதும் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு 5 இடங்களில் மையங்கள் இயக்கப்படும்
- எய்ம்ஸ் போல 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத உயர் கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும்.