ஜெயராஜ், பெனிக்ஸ் மரணத்தை விடுங்க… இ-பாஸ் வாங்காம சாத்தான்குளம் எப்படின்னு சொல்லுங்க… – உதயநிதியை சீண்டும் ஆளுங்கட்சி
சாத்தான்குளம் தந்தை, மகன் மரணமடைந்த செய்தியை விட சிலருக்கு உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளம் சென்ற விவகாரம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதை சமூக ஊடகங்களை பார்க்கும்போது காண முடிகிறது.
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் மரணம் தொடர்பாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல், அது சாதாரண விஷயம் என்பது போல கடந்து சென்ற அ.தி.மு.க, பா.ஜ.க தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலின் சாத்தான்குளம் சென்ற விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு வால் வீசி வருகின்றனர்.
இந்த அங்கீகார அட்டையை வைத்து சேகரிக்கலாமே தவிர, அரசியல் காரியங்களுக்கு பயன்படுத்துவது தவறு என்று சிலர் புது விளக்கம் அளித்துள்ளனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மர்ம மரணம் பற்றி தினம் தினம் அதிர்ச்சி தகவல் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், அதை திசை திருப்ப உதயநிதியை பிடித்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என்கின்றனர் தி.மு.க-வினர்.