முதல்வரின் தனிச் செயலராக இருவர் நியமனம்
Updated: May 10, 2026, 13:23 IST
தமிழக முதலமைச்சர் விஜயின் தனிச்செயலாளராக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனர்.
சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் முதல்வர் விஜய்யின் தனிச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் ஆதிதிராவிடர் நலத்துறை செயலராக இருந்த லட்சுமி பிரியா முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வரின் தனிச் செயலர்கள் இருவரும் பதவியேற்றதில் இருந்து ஓராண்டுக்கு பதவியில் இருப்பார்கள்.