×

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் துணை நிற்பேன்- விஜய்

 

இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் துணை நிற்பேன் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.


வக்ஃப் திருத்த சட்டப்படி எந்த புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளப்படாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்ஃப் சொத்துக்கள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் இடைக்கால உத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம். 

இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில், “வக்ஃப் திருத்த சட்டப்படி எந்த புதிய உறுப்பினர் நியமனமும் மேற்கொள்ளப்படாது என்றும், ஏற்கனவே பதியப்பட்ட வக்ஃப் சொத்துக்கள் மீது எந்தப் புதிய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது. இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் துணை நிற்பேன். இஸ்லாமியர்களின் உரிமையான வக்ஃபு வாரியம் தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.