"சொருவிடுவேன், முடிஞ்சா தொட்டு பாருடா" என பேசிய தவெக ஆதரவாளர் கைது
Oct 3, 2025, 21:51 IST
நேற்று முன் தினம் யூடியுபர்கள் @RoastbrotherS- ஐ ஊடகங்களின் முன்பாகவே “சொருவிடுவேன்” என்று கொலைமிரட்டல் விடுத்த கோகுல் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை ரோகினி திரையரங்கின் வெளியே யூடுயூபர்கள் சிலர் த.வெ.க.கரூர் பரப்புரையில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பேசி வந்தனர். அப்போது நடுவே வந்த விஜய் ரசிகர் ஒருவர் விஜய்க்கு ஆதரவாக பேச ஆரம்பித்த போது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதாக தெரிகிறது. அப்போது யூடியூபர்களை பார்த்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.