கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் - டிடிவி தினகரன்
இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் பெருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.எண்ணிலடங்கா துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்த போதிலும் அன்பு தான் உலகின் ஆகப்பெரிய சக்தி என்பதை நிரூபித்து அதன் வழியாகவே இவ்வுலகை வென்றெடுத்தவர் இயேசுநாதர். பேரன்பையும் நல் சமாதானத்தையும் உலகெங்கும் பரப்பும் நாளாக அமைந்திருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை. உலக சகோதரத்துவத்தையும். உண்மையான வாழ்வியல் தத்துவத்தையும் நம் அனைவருக்கும் உணர்த்துகிறது.