×

கூடிய விரைவில் அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும் - சூர்யா சிவா

 

கூடிய விரைவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் பொய் பிம்பம் உடையும் என சூர்யா சிவா குறிப்பிட்டுள்ளார். 
 
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் தமிழக பாஜகவின் ஓ.பி.சி. பிரிவின் மாநில செயலராக இருந்து வந்தார். பாஜக சிறுபான்மையினர் பிரிவு தலைவர் டெய்சி சரணும், சூர்யா சிவாவும் அலைபேசியில் மோதிக் கொண்ட ஆடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. அந்த ஆடியோவில் சூர்யா சிவா, டெய்சி சரணை தகாத வார்த்தைகளில் பேசியது தெரிய வந்ததை தொடர்ந்து, அவரை ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்கி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடவடிக்கை மேற்கொண்டார்.  இதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக சூர்யா சிவா அறிவித்தார். இருப்பினும் அவர் வேறு எந்த கட்சிக்கும் செல்லாமல் இருந்து வந்தார்.