திருப்பதியில் குலுக்கல் மூலம் தரிசன டோக்கன்!
திருப்பதியில் குலுக்கல் மூலம் தரிசன டோக்கன்!திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசியையொட்டி வைகுண்ட துவாரம் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் வைகுண்ட துவார தரிசன ஏற்பாடுகள் குறித்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மூன்று அமைச்சர்கள் கொண்ட துணைக் குழுவின் உறுப்பினர்களான இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராமநாராயண ரெட்டி, உள்துறை அமைச்சர் அனிதா மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் அனகானி சத்ய பிரசாத், ஆகியோர் ஆய்வு கூட்டம் நடத்தினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஆனம் ராம நாராயண ரெட்டி முதல்வர் நாரா சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில், டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை நடைபெறும் வைகுண்ட துவார தரிசனங்களில் சாதாரண பக்தர்களுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படும். வைகுண்ட துவார தரிசனத்தில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் வகையில் மொத்தம் பத்து நாட்களில் 182 மணிநேர தரிசன நேரத்தில், 164 மணிநேரம் இலவச தரிசனத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் இலவச தரிசனத்திற்கான பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக குலுக்கல் மூலம் இலவச தரிசன டோக்கன்களைப் பெற்ற அனைத்து பக்தர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு திருமலையை அடைய வேண்டும். வரிசைகள் அனைத்து ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் வரிசைகள் கண்காணிக்கப்படுகின்றன. வரிசை கண்காணிப்பு, பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் காத்திருப்பு நேரத்தை ஏ.ஐ. மூலம் மதிப்பிடுவதன் மூலம் வரிசை மேலாண்மை மேற்கொண்டு காவல்துறை மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் ஒருங்கிணைந்து பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
27 மாநிலங்களைச் சேர்ந்த 23.64 லட்சம் பேர் குலுக்கல் மூலம் தரிசன டோக்கன் பெற்றுள்ளனர். முதல் மூன்று நாட்களுக்கு 1.89 லட்சம் இலவச டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த டோக்கன்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு வர வேண்டிய நாள் மற்றும் நேரம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் இல்லாத பக்தர்கள் ஜனவரி 2 முதல் 8 ஆம் தேதி வரை சர்வ தரிசனம் ( இலவச தரிசனத்தில் எந்தவித டோக்கன்கள் இல்லாவிட்டாலும் இலவச வரிசையின் வழியாக அனுமதிக்கப்பட்டு வைகுண்ட துவாரத்தில் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்படும். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பல்வேறு உணவுப் பொருட்கள், குடிநீர் மற்றும் பிற வசதிகள் வழங்கப்படும். அனைத்து பிரிவு பக்தர்களையும் போலீசார், தேவஸ்தான அதிகாரிகளுடன் ஒத்துழைத்து பொறுமையுடன் காத்திருந்து சாமியை தரிசிக்க வேண்டும் என பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பக்தர்கள் முழுமையாக திருப்தி அடையும் வகையில் அர்ப்பணிப்புடன் சேவைகளை வழங்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.