×

நாளை இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போ எங்கு நிகழும்..!

 

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய ஒளியை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ மறைக்கும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் வானத்தில் சூரியனின் பிறை வடிவ நிழல் தோன்றும். சந்திர கிரகணங்களைப் போலல்லாமல், சூரிய கிரகணங்கள் பூமியில் குறிப்பிட்ட இடங்களிலிருந்து மட்டுமே தெரியும்.

சூரிய கிரகணம் செப்டம்பர் 21, 2025 அன்று நிகழ உள்ளது. இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமாகும். இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், அதாவது சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும். உலகின் சில பகுதிகளில் உள்ள மக்கள் வானத்தில் பிறை வடிவ சூரியனைக் பார்க்கமுடியும். இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், சில பகுதிகளில் சந்திரன் சூரியனின் 85% வரை மறைக்கும்.

செப்டம்பர் 21ஆம் தேதி இரவு 10.59 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்குகிறது. நள்ளிரவு 1.11 மணிக்கு முழுமை அடைந்து செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலை 3.23 மணியளவில் சந்திர கிரகணம் நிறைவடைகிறது.வானம் சற்று மங்கலாக இருக்கும், ஆனால் முழு கிரகணத்தைப் போல முற்றிலும் இருட்டாக மாறாது.

இந்த கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்ட சில பகுதிகள் தெற்கு அரைக்கோளத்தில் காணப்படும். ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளால் பார்க்க முடியாது.

பகுதி நேர சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்கிறது. இந்த நேரத்தில், இந்தியாவில் சூரியனை சுற்றி வரும் போது இந்திய பகுதி அடியில் இருக்கும். இதன்காரணமாக இந்த சூரிய கிரணத் பார்க்க முடியாது. முன்னதாக இந்த ஆண்டு, முதலாவது, பகுதி சூரிய கிரகணம், மார்ச் 29 அன்று நடந்தது குறிப்பிடத்தக்கது