×

தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு - அதிர்ச்சியில் சாமானியர்கள்!!

 

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே சரிவை சந்தித்து வந்த நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் இருந்து மீண்டும் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கியது. இந்தியாவில் விழா காலங்கள் ஆரம்பிக்கும் நிலையில் தங்கத்தின் தேவை அதிகரிக்க தொடங்கிவிட்டது. இதனால் அதன் விலையும் மீண்டும் உச்சத்தை தொட ஆரம்பித்துள்ளது.


இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 70 அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.4775 என விற்பனை ஆகிறது.   இதன் மூலம் சவரனுக்கு ரூபாய் 560 அதிகரித்துள்ளது.  இதனால் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூபாய் 38,200 ஆக உயர்ந்துள்ளது.  இதே போல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 4.20 காசுகள் அதிகரித்துள்ள நிலையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 66 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.