×

மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளிடம்..தப்பியோடிய திமுக பிரமுகரை பிடிக்க தனிப்படை

தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளிடம் ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷம் செய்து வந்த திமுக பிரமுகரை பிடிக்க போலீஸ் தேடி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில் தனியார் மதுபான விடுதி நடத்தி வந்தவர் சிவகுமார். திமுக பிரமுகரான இவர் மீது தற்போது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இவர் இதற்கு முன்னதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது மது பாரில் 9 வயது சிறுவனை மதுபான விற்பனை
 

தனது மனைவியின் முதல் கணவருக்கு பிறந்த மகளிடம் ஆபாச வீடியோவை காட்டி சில்மிஷம் செய்து வந்த திமுக பிரமுகரை பிடிக்க போலீஸ் தேடி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகாவில் தனியார் மதுபான விடுதி நடத்தி வந்தவர் சிவகுமார். திமுக பிரமுகரான இவர் மீது தற்போது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். இவர் இதற்கு முன்னதாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தனது மது பாரில் 9 வயது சிறுவனை மதுபான விற்பனை செய்ய வைத்ததால் அது குறித்த குற்றச்சாட்டில் சிக்கி இருக்கிறார். இந்நிலையில் சிறுமியிடம் செய்த சில்மிசத்தால் போக்சோவில் சிக்கியிருக்கிறார்.

குஜிலியம்பாறையை சேர்ந்தவர் பொன்னரசி. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் அவரை பிரிந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக சிவகுமாரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். 10 ஆண்டுகளாக சிவகுமாருடன் வாழ்ந்து வரும் முத்து பொன்னரசிக்கு முதல் கணவருக்கு பிறந்த மகள் இருக்கிறார். அவருக்கு தற்போது 15 வயது ஆகிறது.

இந்த நிலையில் முத்து பொன்னரசி இல்லாத நேரம் பார்த்து அவரின் மகளிடம் செல்போனில் ஆபாசப் படங்களை காட்டி அந்தரங்க உறுப்புக்களை தொட்டு சில்மிஷம் செய்து வந்திருக்கிறார். இதை தனது தாயிடம் சொல்லி அழுதிருக்கிறார் . அதை கேட்டு அதிர்ச்சியான முத்து பொன்னரசி குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை பிடிக்க போலீசார் நினைத்தபோது சிவக்குமார் தலைமறைவாகிவிட்டார். ஆகவே, தலைமறைவாக இருக்கும் சிவக்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.