×

நாளை முழு ஊரடங்கு: 193 சோதனை சாவடிகள் மூலம் தீவிரமாக கண்காணிக்க சென்னை மாநகர காவல் முடிவு

இசென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே, இன்று பால் விநியோகம், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு 144ன் படி வழக்குப்பதிவு
 

இசென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் நள்ளிரவு 12 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனவே, இன்று பால் விநியோகம், மருந்து கடைகள், மருத்துவமனை ஊர்திகள், அவசர மற்றும் அமரர் ஊர்திகள் தவிர எந்தவிதமான செயல்பாடுகளுக்கும் அனுமதி கிடையாது. இதைத் தவிர வேறு எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மீறிவரும் வாகனங்கள் மீது குற்றவியல் நடைமுறை பிரிவு 144ன் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இதை கண்காணிக்க நகரம் முழுவதும் 193 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.மீறுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்

அவசியமின்றி யாரும் வெளியில் வரக்கூடாது. இது தொடர்பாக சந்தேகங்களுக்கு போக்குவரதது காவல் கட்டுப்பாட்டு அறையை 044-23452330, 044-23452362 அல்லது 90003130103 என்ற எண்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.