×

இறப்பு இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் – தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 22ஆயிரத்தினை கடந்த நிலையில் ஊரடங்கு ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கில் சில தளர்வுகளும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இறுதி ஊர்வலத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி இருந்த நிலையில் 50 பேர் வரை பங்கேற்கலாம், ஆனால் தனிமனித
 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 22ஆயிரத்தினை கடந்த நிலையில் ஊரடங்கு ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கில் சில தளர்வுகளும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டது.

இந்நிலையில் இறுதி ஊர்வலத்தில் 50 பேர் வரை பங்கேற்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இறுதி ஊர்வலத்தில் 20 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி இருந்த நிலையில் 50 பேர் வரை பங்கேற்கலாம், ஆனால் தனிமனித இடைவெளியை தவறாமல் கடைபிடித்து இறுதி ஊர்வலம் நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.