"எலக்ஷன்ல நிக்கவே தேவையே இல்லை, தளபதி தான் முதல்வர்னு அறிவிச்சுட்டு நம்ம ஆட்சியை நடத்திட்டு இருக்கலாம்"- எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு
Jul 5, 2026, 09:39 IST
தமிழ்நாட்டில் எதிர் கட்சியே இருக்காத நிலைமை வந்துவிடும் என திருப்பத்தூர் (சிவகங்கை) எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக திருப்பத்தூர் (சிவகங்கை) எம்.எல்.ஏ சீனிவாச சேதுபதி பேசுகையில், “தேர்தல் வைக்க வேண்டிய தேவையே இல்லை, எலக்ஷன்ல நிக்கவே தேவையே இல்லை, நிரந்தரமா தளபதி தான் முதலமைச்சர் என்று அறிவித்துவிட்டு நம்ம ஆட்சிய நடத்திக்கிட்டு இருக்கலாம். போற போக்கப் பார்த்தா தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகும். திராவிட கட்சிகள் ஆண்டு கொண்டிருந்த தமிழ்நாட்டில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளால் தான் தமிழக வெற்றிக் கழகம் ஆண்டு கொண்டிருக்கிறது” என்றார்.