×

“ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மும்முனை மின்சாரம்” : முதல்வர் பழனிசாமி

மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்நிலையில் மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.சரபங்கா வடிநிலத்திலுள்ள 100 வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து திப்பம்பட்டியில் பேசிய முதல்வர் பழனிசாமி, மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 5 ஆண்டு காலத்தில் இரண்டு
 

மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.சரபங்கா வடிநிலத்திலுள்ள 100 வறண்ட ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து திப்பம்பட்டியில் பேசிய முதல்வர் பழனிசாமி, மும்முனை மின்சாரம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 5 ஆண்டு காலத்தில் இரண்டு முறை விவசாயிகளின் பயிர்க் கடனை ரத்து செய்து அரசு அதிமுக அரசு. குறுகிய காலத்தில் விவசாயிகள் மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார். விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் முதல்வர் பழனிசாமி.

ரூ. 565 கோடியில் நிறைவேற்றப்பட்டுள்ள மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.மேட்டூர் அணையின் உபரி நீர் மேட்டூர், ஓமலூர், சங்ககிரி, எடப்பாடி தொகுதிகளில் உள்ள 100 க்கு அனுப்பப்படும்.மேட்டூர் அணையின் நீர் 500 வரண்ட ஏரிகளுக்கு நிரப்புவதால் 4 ஆயிரத்து 238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.விழாவில் ரூ.5.36 கோடியில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.