×

சனாதன அரக்கனே யோகி ஆதித்யநாத் பதவி விலகு- தொல்.திருமாவளவன்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயது தலித் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யோகி ஆதித்யநாத் அரசை பல அரசியல் கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.
 

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 19 வயது தலித் பெண் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யோகி ஆதித்யநாத் அரசை பல அரசியல் கட்சி தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், ”உத்தரப் பிரதேச முதல்வரே பதவி விலகு; இந்த மாநிலத்தில் மட்டும் 2019ல் தலித்கள் மீது 11829 குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. ”சனாதன அரக்கனே யோகி ஆதித்யநாத்தே பதவி விலகு”, ”தலித்களுக்கும், பெண்களுக்கும் எதிரான வன்கொடுமைகள்”, ”மோடி அரசே, யோகி அரசே, சாதிவெறி, மதவெறி, ஆணாதிக்க வெறி ஆகியவற்றின் ஊற்றுக்கண் சனாதன வெறியை கை விடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.