×

5 ரூபாய் மருத்துவர் மறைவு : முக ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்!

வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த திருவேங்கடம் வீரராகவன் நேற்று மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 70. ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த நிலையில் பிறகு அதை ஐந்து ரூபாயாக மாற்றினார். தான் இலவசமாக பெற்ற மருத்துவத்தை இலவசமாக மக்களுக்கு கொடுப்பதே தனது லட்சியம் என வாழ்ந்த இவர் ஏழை எளியவர்களால் போற்றப்பட்டு வந்தவர். வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத்
 

வியாசர்பாடி மற்றும் எருக்கஞ்சேரியில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ஐந்து ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வந்த திருவேங்கடம் வீரராகவன் நேற்று மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது 70.

ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த நிலையில் பிறகு அதை ஐந்து ரூபாயாக மாற்றினார். தான் இலவசமாக பெற்ற மருத்துவத்தை இலவசமாக மக்களுக்கு கொடுப்பதே தனது லட்சியம் என வாழ்ந்த இவர் ஏழை எளியவர்களால் போற்றப்பட்டு வந்தவர்.

இந்நிலையில் 5 ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் வீரராகவன் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “வடசென்னையில் வெறும் 2 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத் தொடங்கி தன் வாழ்நாளில் அதிகபட்சமாக ரூ.5 மட்டுமே சிகிச்சை கட்டணமாகப் பெற்றவர் ‘மக்கள் டாக்டர்’ திருவேங்கடம்! எளிய மக்களின் உயிர் காக்கும் அன்பிற்குரிய மருத்துவராக விளங்கிய திருவேங்கடம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.