பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்… செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த கூலித் தொழிலாளி! – குமிடிப்பூண்டி அருகே பரபரப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரடங்கு விதிமுறைகைள மீறி சாலையில் சுற்றித் திரிந்த கூலித் தொழிலாளியின் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அவர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏறாவூர் நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா.
இதனால் ஆத்திரமடைந்த ராஜா ஏறாவூர் பஜார் பகுதியில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக அறிவித்தார். இது குறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர்.