×

தேர்வு கிடையாது..! அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் அலுவலக உதவியாளர், எழுத்தர் வேலைவாய்ப்பு..! 

 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் திருக்கோயிலில் பணியாற்ற விரும்பும் நபர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும்.சென்னை – திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள 10 இளநிலை உதவியாளர், வசூல் எழுத்தர், அலுவலக உதவியாளர், காவலர், வேதபாராயணம், உதவி சுயம்பாகம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 30.01.2026 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவையான கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, மற்றும் வயது வரம்பு எவ்வளவு என்பது போன்ற விரிவான தகவல்களை பார்க்கலாம்

நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 10
பணியிடம் சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 31.12.2025
கடைசி தேதி 30.01.2026

1. பதவி: இளநிலை உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

2. பதவி: வசூல் எழுத்தர்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

3. பதவி: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

4. பதவி: காவலர்

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

5. பதவி: வேதபாராயணம்

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். யாதொரு சமையல் நிறுவனங்களால் அல்லது அரசு நிறுவனங்களால் அல்லது ஏனைய யாதொரு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

6. பதவி: உதவி சுயம்பாகம்

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். கோயில்களின் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: https://hrce.tn.gov.in/ இணையதளத்திற்கு சென்று விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)

Step 2: பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, கேட்கப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யவும்.

Step 3: பின்னர் தேவையான கல்வி சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை -19

Step 4: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 30.01.2026 அன்று மாலை 5.45 மணி வரை மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். அதன் பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.