தேனியில் அரசு மருத்துவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா! – மக்கள் அதிர்ச்சி
தேனியில் அரசு மருத்துவர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா! – மக்கள் அதிர்ச்சி
தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தவிர்க்க வழி தெரியாமல் அரசு திணறி வருகிறது. பொது மக்கள் ஒத்துழைக்கவில்லை என்று மக்கள் மீது பழிபோடப்பட்டு வருகிறது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் உள்ளிட்ட ஆறு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 175 ஆக உயர்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 124 பேர் குணமடைந்துள்ளனர். 49 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அரசு அறிவித்துள்ளது.