×

உயிரை பறித்த அதிவேகம்... 140 கிமீ வேகத்தில் பைக் சாகசம் செய்த இளைஞர் தலை துண்டிப்பு..!
 

 

சூரத்​தைச் சேர்ந்தவர் 18 வயதான பிரின்ஸ் படேல். இந்த இளைஞர் 'PKR Blogger' என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.வேக​மாக பைக் ஓட்​டு​வ​தில் வல்​ல​வ​ரான பிரின்ஸ் படேல், தனது கேடிஎம் டியூக் மோட்​டார் சைக்​கிளை அதிவேகத்​தில் ஓட்டி அதை வீடியோ​வாகப் பதி​விட்டு வந்​தார்.

இந்​நிலை​யில் அண்​மை​யில் சூரத்​தில் உள்ள கிரேட் லைனர் மேம்​பாலத்​தில், பிரின்ஸ் படேல் 140 கிலோமீட்​டர் வேகத்​தில் பைக்கை ஓட்​டி​யுள்​ளார். அப்​போது கட்​டுப்​பாட்டை இழந்த இவரது வாக​னம் தரை​யில் விழுந்து நொறுங்​கியது. இதில் பிரின்ஸ் படேல் தலை தனி​யாக துண்​டிக்​கப்​பட்டு உடல் தனி​யாக விழுந்​தது. பைக் வேக​மாக வந்​த​தால் தரை​யில் விழுந்​த​போது பிரின்ஸ் படேல் பலமுறை உருண்​டார். அப்​போது​தான் இவரது தலை துண்​டிக்​கப்​பட்டு உடல் தனி​யாக விழுந்து சிதறியது. பைக் ஓட்​டிய​போது, பிரின்ஸ் படேல் ஹெல்​மெட் அணி​ய​வில்லை என்று தெரிய​வந்​துள்​ளது.

கடந்த செப்​டம்​பர் மாதத்​தில்​தான் இந்த புதிய பைக்​கை, பிரின்ஸ் படேல் வாங்​கி​யுள்​ளதும் தெரிய​வந்​துள்​ளது. பிரின்ஸ் படேலின் தாய், குடிசைப்​பகு​தி​யில் வசித்து வரு​கிறார். தினந்​தோறும் பால் விற்று அதில் வரும் பணத்​தில் வாழ்க்​கையை நடத்தி வரு​கிறார். 

விபத்து நடந்த CCTV காட்சிகளின்படி, மல்டி-லெவல் மேம்பாலமான 'கிரேட் லைனர் பாலத்தின்' மீது சுமார் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது பைக் கட்டுப்பாட்டை இழந்து, பிரின்ஸ் சாலையில் விழுந்தார்.சாலையில் பலமுறை உருண்டு, ஒரு இடத்தில் நின்றபோது, அவரது தலை துண்டிக்கப்பட்டு உடல் வேறு, தலை வேறாக கிடந்தது. மோட்டார்சைக்கிள் தடுப்புச் சுவரில் உரசிக்கொண்டே சில நூறு மீட்டர் தூரம் சென்று நின்றது.

விபத்து குறித்த ஆரம்பக்கட்ட விசாரணையில், பிரின்ஸ் விபத்தின்போது ஹெல்மெட் அணியவில்லை என்று தெரிய வந்துள்ளது.