×

இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்

கடந்த 2016 – 17 ஆம் கல்வியாண்டு முதல் 2019-20 வரை எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கைக்கு இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்து, கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் நேரில் கலந்தாய்வு நடைபெறும். தற்போது கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க இந்த அண்டும் எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கைக்கான கலந்தாய்வும் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பப்பதிவு செய்யவிருக்கும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும்
 

கடந்த 2016 – 17 ஆம் கல்வியாண்டு முதல் 2019-20 வரை எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கைக்கு இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் பதிவு செய்து, கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரியில் நேரில் கலந்தாய்வு நடைபெறும். தற்போது கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க இந்த அண்டும் எம்பிஏ, எம்சிஏ முதுநிலை சேர்க்கைக்கான கலந்தாய்வும் வீட்டிலிருந்தபடியே இணையதளம் மூலம் நடைபெற வழிவகை செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் விண்ணப்பப்பதிவு செய்யவிருக்கும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் B.E/B.Tech இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை, பகுதி நேர சேர்க்கை இணையதளம் மூலமாகவே நடைபெறும் என்றும் இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஆக. 16ஆம் தேதி நடைபெறும் என்றும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.