செயினை பறிக்க பெண்ணை தர தரவென இழுத்து சென்ற கொள்ளையர்கள்
May 15, 2023, 21:39 IST
கோவை ஜி.வி.ரெசிடென்ஸி அருகே நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணின் செயினை பறிக்க காரில் தரதர வென இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு ஹட்கோ காலணி பகுதியை சேர்ந்தவர் கவுசல்யா(38). இவர் வழக்கமாக தனது கணவருடன் நடைபயிற்சிக்குச் செல்வார். இந்நிலையில் இன்று காலை 6.30 மணியளவில் கவுசல்யா மட்டும் நடைபயற்சிக்கு சென்றார். அப்போது கவுசல்யா ஜி.வி.ரெசிடென்ஸி அருகே வந்த போது பின்னால் காரில் வந்த மர்ம நபர்கள் கவுசல்யா கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர்.