×

விபத்துக்கு நடுவே செல்பி கேட்ட நபர்! கடுப்பான ஜீவா...

 

கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக ஜீவா மற்றும் அவர் மனைவி உயிர் தப்பினர்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே நடிகர் ஜீவா சென்ற கார் சாலையின் தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜீவாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனம் குறுக்கே வந்ததால், அதன்மீது மோதாமல் இருக்க திருப்பியபோது கார் சாலையின் தடுப்பு மீது மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நல்வாய்ப்பாக விபத்தில் ஜீவா மற்றும் அவர் மனைவி லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.