எதிர்க்கட்சி தலைவருக்கு மரியாதை தரவேண்டும்.. ஓபிஎஸ்..!
பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு மரியாதை தேவை..இது தான் மரபா? ஓபிஎஸ் கேள்வி
"கேபினட் அந்தஸ்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது குறுக்கிட்டு அமைச்சர்கள் பேசுவது மரபா? அவருக்குரிய மரியாதை தர வேண்டும்" என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேரவையில் முறையிட்டார். இதற்கு பதிலளித்த சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், "முதலமைச்சர் பற்றிப் பேசும்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் எழுந்து விளக்கம் அளிக்காவிட்டால் இங்கு இருப்பதற்கே அர்த்தமில்லாமல் போய்விடும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், நீங்கள் பேசுவது எனக்கு புரிகிறது. முதல்வர் பற்றி பேசும் போது, அமைச்சர் எழுந்து பேசாமல் போனால், இங்கு அமர்ந்திருப்பதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் என கூறினார்.
”அவையில் அமைச்சர் அளவுக்கு எதிர்கட்சி தலைவருக்கும் மரியாதை இருக்கிறது.. 4 முறை அவர் எந்திருச்சு எந்திருச்சு உட்கார்றாரு.. நீங்க மத்தவங்கள பேச கூப்புடுறீங்க.. இது எந்த விதத்துல நியாயம்”... சபாநாயகர் மீது குற்றச்சாட்டு வைத்த ஓபிஎஸ்..!#TNAssembly | #TNCMVijay | #UdhayanidhiStalin… pic.twitter.com/DYkpfmHgTp
— Polimer News (@polimernews) August 21, 2026