×

விமான விபத்தில் உயிரிழந்த பணிப்பெண் தனது தந்தையுடன் பேசிய கடைசி உரையாடல்..!

 

மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரை ஏற்றிச் சென்ற சார்ட்டர்டு லியர்ஜெட் விமானம் இன்று காலை விபத்துக்குள்ளானதில், இரண்டு இளம் பெண்கள், கேபின் குழு உறுப்பினர் பிங்கி மாலி, 29, மற்றும் பைலட்டுகள் கேப்டன் சுமித் கபூர், கேப்டன் ஷாம்பவி பதக் ஆகியோர் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.விபத்து நடந்த சிறிது நேரத்திலேயே, பிங்கி மாலிக்கும் அவரது தந்தை ஷிவ்குமார் மாலிக்கும் இடையிலான இறுதி உரையாடல் வெளிவந்துள்ளது.

அதில் அவர் நாளை தந்தையிடம் பேசுவதாக உறுதியளித்தார். மும்பையின் வோர்லியில் வசிக்கும் பிங்கி மாலி, தனது தந்தையிடம், மறுநாள் அஜித் பவாருடன் பாராமதிக்குப் பயணம் செய்வதாகக் கூறினார்.

அப்பா, நான் துணை முதல்வர் அஜித் பவாருடன் பாராமதிக்கு விமானத்தில் செல்கிறேன். அவரை இறக்கிவிட்ட பிறகு, நான் ஹோட்டலை அடைந்ததும் உங்களிடம் பேசுவேன்...' என்று சிவகுமார் தனது மகளுடனான கடைசி உரையாடலை நினைவு கூர்ந்தார்.

பிங்கி தனது தந்தையிடம், "அப்பா, நான் இப்போது அஜித் பவாருடன் பாராமதிக்குச் செல்கிறேன். அவரை அங்கே இறக்கிவிட்டு, பிறகு நந்தேடுக்குச் செல்வேன். நாம் நாளை விரிவாகப் பேசலாம்" என்று கூறியுள்ளார்.

அதற்கு அவரது தந்தை, "சரிம்மா, வேலை முடிந்ததும் நாளை பேசலாம்" என்று பதிலளித்துள்ளார்.

ஆனால், அந்த நாளை இனி ஒருபோதும் வராது என்று அவரது தந்தை கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.  

பிங்கி மாலி யார்?

மும்பையைச் சேர்ந்த கேபின் குழு உறுப்பினரான பிங்கி மாலி, தனது குடும்பத்துடன் வோர்லியில் வசித்து வந்தார், மேலும் அந்த வாடகை விமானத்தில் பணியில் இருந்தார். கிழக்கு உத்தரபிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள பைன்சா கிராமத்தைச் சேர்ந்த பிங்கி, விமானப் போக்குவரத்துத் துறையில் சேருவதற்கு முன்பு தானேயில் பள்ளிப் படிப்பையும் உயர்கல்வியையும் முடித்திருந்தார்.