×

இல்லத்தரசிகள் ஷாக்..!! வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு..!!

 

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு உத்தரபிரதேசம், மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து வெங் காயம் விற்பனைக்கு வருகிறது. மராட்டிய மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாகவும், வெங்காய ஏற்றுமதி அதிகரித்துள்ள காரணத்தாலும் வட மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் வெங்காய வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காய விலை அதிகரித்துள்ளதாக அங்குள்ள மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

பொதுவாக தினசரி 70 முதல் 80 லாரிகளில் கோயம்பேடு மார்க்கெட் டுக்கு வரும் வெங்காய வரத்து 50 லாரிகளாக குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால், கடந்த 7-ந் தேதி ரூ.30 முதல் ரூ.35-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயம் படிப்படியாக உயர்ந்து நேற்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று வரத்துக் குறைவு காரணமாக தக்காளி மற்றும் உருளைக் கிழங்கு விலையும் கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை உயர்ந்து உள் ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய காய்கறி மொத்த விலை விவரம் (கிலோவுக்கு) வருமாறு:-

நாட்டு தக்காளி ரூ.18 முதல் ரூ.25 வரை, நவீன் தக்காளி ரூ.40, உருளை கிழங்கு ரூ.15 - ரூ.35, கேரட் ரூ.50 ரூ.70, பீன்ஸ் ரூ.60 - ரூ.80, பீட்ரூட் ரூ.50 - ரூ.60, முட்டைகோஸ் ரூ.20 - ரூ.25, வெண்டைக்காய் மற்றும் வரி கத்திரிக்காய் ரூ.25 -ரூ.30, நாட்டு கத்திரிக்காய் ரூ.30 - ரூ.40, பாகற்காய் ரூ.40 - ரூ.50, புடலங்காய் ரூ.20ரூ.30, சுரக்காய் ரூ.15 - ரூ.25, முருங் கைக்காய் ரூ.25 ரூ.30, சேனைக்கிழங்கு ரூ.30 - ரூ.40, பச்சமிளகாய் ரூ.50 - ரூ.60, இஞ்சி ரூ.90 ரூ.180, பூண்டு ரூ.130 ரூ.240.