வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் அதிகாரிகள் தினமும் இருமுறை ஆய்வு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு
Apr 26, 2026, 16:14 IST
தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் அதிகாரிகள் தினமும் இருமுறை ஆய்வு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு (ஏப்ரல் 23) நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகி வரவாற்று சாதனை படைத்தது. தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அந்தந்த மாவட்டங்களில் வாக்கு என்னும் மையங்களை மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. CCTV கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் அதிகாரிகள் தினமும் இருமுறை ஆய்வு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு இரட்டைப் பூட்டு பாதுகாப்பு முறை பின்பற்றப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.