முதல்வர் மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்! – நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு
ஃபைபர் ஆப்டிக் கேபிள் அமைக்க டெண்டர் விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 12,534 கிராமங்களில் ஃபபர் ஆப்டிக் கேபிள் அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக தி.மு.க சார்பில் தமிழக ஊழல், லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அங்கு விசாரணை நடத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அதே போல் தஞ்சாவூர் மாவட்டத்தில் 464 கி.மீ தூரத்துக்கு சாலை அமைக்க ரூ.1165 கோடி டெண்டர் கோரியதில் முறைகேடு நடந்ததாகவும் அது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி வழக்கு தொடரப்பட்டுள்ளது.