×

பாட்டிக்கு திதி கொடுக்க குட்டையில் குளிக்கப்போன பேரன் 30மணி நேர தேடலுக்குப் பின் சடலமாக மீட்பு

கல்குவாரி குட்டையில் மூழ்கிய மாற்றுத்திறனாளி முப்பது மணி நேர தேடலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தமிழ் செல்வன். கடந்த வாரம் இவரது பாட்டி இறந்ததால் ஆலங்காயம் சாலையில் உள்ள ஊசி தோப்பு பகுதியில் உள்ள கல்குவாரி அருகே திதி கொடுப்பதற்காக சென்று இருந்தனர். அப்போது கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த மழை நீரில் குளிப்பதற்காக தமிழ்ச்செல்வன் தனது செயற்கை காலை கரையில் கழற்றி வைத்து விட்டு
 

கல்குவாரி குட்டையில் மூழ்கிய மாற்றுத்திறனாளி முப்பது மணி நேர தேடலுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி தமிழ் செல்வன். கடந்த வாரம் இவரது பாட்டி இறந்ததால் ஆலங்காயம் சாலையில் உள்ள ஊசி தோப்பு பகுதியில் உள்ள கல்குவாரி அருகே திதி கொடுப்பதற்காக சென்று இருந்தனர். அப்போது கல்குவாரி குட்டையில் தேங்கியிருந்த மழை நீரில் குளிப்பதற்காக தமிழ்ச்செல்வன் தனது செயற்கை காலை கரையில் கழற்றி வைத்து விட்டு தண்ணீரில் இறங்கியுள்ளார். அப்போது அவர் ஆழமான பகுதியில் நீரில் சிக்கி சத்தமிடவே அவரது தந்தை ராஜா காப்பாற்றுவதற்கு முயற்சிக்க, தந்தையின் கண் முன்னே அவர் நீரில் மூழ்கி மாயமானார்.

இதனை தொடர்ந்து அவரது தந்தை உடனடியாக வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய தமிழ்ச்செல்வன் உடலை தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும் பணியை கைவிட்டு மீண்டும் இரண்டாவது நாளாக இன்று வாணியம்பாடி, ஆலங்காயம், ஆம்பூர், நாட்றம்பள்ளி, வேலூர் உள்ளிட்ட 5 பகுதிகளில் இருந்து நீச்சல் பயிற்சி பெற்ற தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 30 மணிநேரம் தேடலுக்கு பின்னர் தமிழ்செல்வன் சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.