×

ஆசிரியர் ராஜகோபாலன் அளித்த வாக்குமூலம்…அதிர்ச்சியில் காவல்துறை!!

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை கேகே நகர் PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் தொல்லை புகார் அளித்த நிலையில் புகாரின் அடிப்படையில் கடந்த 24ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் மீது இதுவரை சுமார் 6 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 3
 

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலனிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில் பல உண்மைகள் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை கேகே நகர் PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் தொல்லை புகார் அளித்த நிலையில் புகாரின் அடிப்படையில் கடந்த 24ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அவர் மீது இதுவரை சுமார் 6 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்பில் மாணவிகளை ஆபாசமாக படம்பிடித்து அதை மார்பிங் செய்து அவர்களுக்கு அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. ராஜகோபாலனின் வாக்குமூலம் அடிப்படையில் இன்னும் சில ஆசிரியர்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது. ஆன்லைன் வகுப்பின் போது மாணவிகளை ஜூம் செய்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து ரசித்து வந்தது அம்பலமாகியுள்ளது.

2 நாட்களில் கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் ராஜகோபாலன் மாணவிகளை பாலியல் தொந்தரவு செய்த விதத்தையும், ஐந்து மாணவிகளிடம் இருந்து பெற்ற ஒவ்வொரு வாக்குமூலத்தையும் தனித்தனி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மாலை 3 மணி வரை விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றவுடன் ஆசிரியர் ராஜகோபாலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் முடிவெடுத்துள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அலுவகத்தில் பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் புகார் அளித்த மாணவிகள் நேரில் ஆஜராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.