×

மதுரையில் இன்று மதுக்கடைகள் மூடல்

 

தமிழகத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போர்க்கொடி ஏந்திய வீரர்களுள் முக்கியமானவர்கள் மருது பாண்டிய சகோதரர்கள். சிவகங்கை சீமையை ஆண்டவர்களும் சுதந்திர போராட்ட வீரர்களுமான மருது சகோதரர்களை, கடந்த 1801 ஆண்டு  ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்டனர். அந்த நாள் ஆண்டுதோறும் மருது சகோதரர்களின் நினைவு நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் மருதுபாண்டியர் நினைவு தினம்,  தேவர் குருபூஜை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இன்று மற்றும் 29, 30 ஆகிய தேதிகளில் அனைத்து மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் . மனமகிழ் மன்றங்கள்,  பார்கள் உள்ளிட்டவையும் 29, 30 ஆகிய தேதிகளில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.