×

வீடற்ற 1000 பழங்குடியினர் மற்றும் 500 நரிக்குறவர் குடும்பங்களுக்கு விரைவில் வீடு - தமிழக அரசு

 

பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற 1000 பழங்குடியினர் குடும்பங்கள் மற்றும் 500 நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீடு கட்டித் தருவதற்காக 79 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் எனவும் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவித்துள்ளார். 

விளிம்பு நிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே அவர்களுக்கான சமூக நீதியாக அமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் எண்ணத்திற்கு உரு கொடுக்கும் வகையில், 2023-2024 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீது மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி.என்.கயல்விழி செல்வராஜ் அவர்களால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் தொடர்பாக கீழ்க்கண்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது.