×

கொரோனா உறுதியானதும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்ற தமிழக ஆளுநர்!

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராஜ்பவன் ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் ஆளுநரின் உதவியாளர் உட்பட மூன்று பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து ஆளுநர் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 3 நாள் தனிமைப்படுத்திகொண்டு இருந்து வந்த நிலையில் ஆளுநருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு
 

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ராஜ்பவன் ஊழியர்களுக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் ஆளுநரின் உதவியாளர் உட்பட மூன்று பேருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து ஆளுநர் 7 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 3 நாள் தனிமைப்படுத்திகொண்டு இருந்து வந்த நிலையில் ஆளுநருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளது. அறிகுறி ஏதும் இல்லாமல் ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.