×

டாக்டர் பத்ரிநாத் மறைவு - தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்

 

மருத்துவர் பத்ரிநாத் மறைவிற்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர்.எஸ்.எஸ்.பத்ரிநாத் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.பல லட்சம் விழிகளுக்கு  ஒளி தந்தோடு, எண்ணற்ற ஏழை,எளிய‌‌ மக்களுக்கு
தரமான கண் மருத்துவ சிகிச்சை‌ இலவசமாக வழங்கியவர்.பல ஆயிரக்கணக்கான கண் சிகிச்சை  நிபுணர்களை உருவாக்கிய சாதனையாளர்.