சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலக தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தியாகத்தை போற்றுவோம் - அண்ணாமலை
Aug 8, 2023, 12:17 IST
சென்னை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலகம், பயங்கரவாதிகளால் குண்டு வைத்து தாக்கப்பட்டதில், தங்கள் இன்னுயிர் நீத்த 11 பேரி தியாகத்தை மதித்து வணங்குவோம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலகம், பயங்கரவாதிகளால் குண்டு வைத்து தாக்கப்பட்டதில், தங்கள் இன்னுயிர் நீத்த 11 தியாகிகளுக்கு இன்று 30 ஆம் ஆண்டு நினைவு நாள். 1993ம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு, 11 பேர் பலியானதும், 7 பேர் பலத்த காயமுற்றதும் காலத்தால் அழிக்க முடியாத வடுவை ஏற்படுத்தியிருக்கிறது.