×

“90 மில்லி புதுச்சேரி மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைதுதான்”- தமிழ்நாடு போலீஸ் எச்சரிக்கை

 

90 மில்லி புதுச்சேரி மதுபாட்டில் எடுத்து வந்தாலும் கைது தான் தமிழ்நாடு போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி மது பாட்டில் எடுத்தி வந்தவர் மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நிலையில் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஒருவர் 4.5 லிட்டர் மது வைத்திருக்க தமிழ்நாடு அரசு அனுமதி என்ற அரசாணையை சுட்டிக்காட்டி வழக்கை ரத்து செய்தது. இந்நிலையில் கடலூர் மாவட்ட மது விலக்கு போலீசார் கூறுகையில் இந்த அரசாணை 2025 திருத்தப்பட்டு வெளியிடப்பட்டதாகவும் அந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகவும். 90 மில்லி புதுச்சேரி மது பாட்டில் எடுத்து வந்தாலும் போலீசார் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என கடலூர் மாவட்ட மதுவிலக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.