×

ஆய்வு என்ற பெயரில் தவெக எம்.எல்.ஏ. அத்துமீறல்?- சமூக வலைதளங்களில் வலுக்கும் கண்டனம்

 

தாம்பரம் எம்.எல்.ஏ. சரத்குமார் ரீல்ஸ் மோகத்தில் கேமராவோடும், காலர் மைக்கோடும் ஆய்வுக்கு செல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

எம்எல்ஏ என்பவர் மக்கள் பிரதிநிதி... அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்  ஆய்வுகளை மேற்கொள்ளலாம்... அதன்படி ஒரு எம்.எல்.ஏவுக்கு தன் தொகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளை ஆய்வு செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் அவருக்கு எந்தவித உத்தரவிடும் அதிகாரமும் இல்லை... அபராதம் விதிப்பது, ஒப்பந்தத்தை ரத்து செய்வது என எந்த அதிகாரமும் இல்லை... தான் ஆய்ந்தறிவதில் ஏதேனும் குறைகளை கண்டால் அதை சரிசெய்து தர அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கலாம்... முறைகேடுகளை கண்டறிந்தால் புகார் அளிக்கலாம்... அதிகாரியின் மீதே புகார் என்றால், அத்துறையின் உயர் அதிகாரிகளிடம் அல்லது காவல்துறையில் புகார் அளிக்கலாம்... அத்துறை அமைச்சர்களிடம் நடவடிக்கை எடுக்கக் கோரலாம். ஏதேனும் மேம்படுத்த, கொண்டுவர, சிறப்பு கவனம்பெற சட்டப்பேரவையில் பேசலாம். தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி மேம்பாட்டு நிதியை வரையறுக்கப்பட்ட முறையில் எதற்கு பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கலாம். அதனைவிடுத்து நேரடியாக அந்த மருத்துவமனையின் டாக்டர்களையோ அதிகாரிகளையோ எச்சரிக்கவோ அவர்களுக்கு ஆணையிடவோ அதிகாரம் கிடையாது. இப்படி இருக்கையில், புதிதாக எம்.எல்.ஏ பொறுப்பேற்றிருக்கும் தவெக எம்.எல்.ஏக்கள் தங்கள் கடமைகள் மற்றும் அதிகாரங்களை மீறி ரீல்ஸ் வெளியிடுவதிலேயே குறியாக இருப்பதாக சமூக வலைதளங்களில் எதிர்மறை விமர்சனங்கள் வருகின்றனர்.