×

திடீரென விஜய்க்கு ஆதரவு குரல் கொடுக்கும் சுப்பிரமணிய சுவாமி

 

தவெக தலைவர் விஜையை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநருக்கு சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்திருக்கிறார்.


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை வென்றுள்ளது. ஆட்சி அமைக்க 118 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவைப்படுவதால் தவெக பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றடைந்த தவெக தலைவர் விஜய், ஆளுநர் அர்லேக்கரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதனையடுத்து விஜய் நாளை காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்கவிருப்பதாக கூறப்படுகிறது.