ஆன்மீகம் அறிவோம் : தினமும் பல நிறம் மாறும் அதிசய கோயில்..!எங்கு உள்ளது தெரியுமா ?
மத்திய பிரதேசம், ஜபல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தினமும் நிறம் மாறக்கூடிய மகாலட்சுமி தேவிக்காக கட்டப்பட்ட திருக்கோயில்.
கோயில் வரலாறு :
கி.பி 16 ஆம் நூற்றாண்டில் கோண்ட்வானாவின் ராணி துர்காவதியின் ஆட்சி காலத்தில் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் புகழ்பெற்ற ஆதார்த்தல் நீர் தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
ஸ்ரீ யந்த்ரா அமைப்பு:
இந்த கோயில் ஒரு ஸ்ரீ யந்த்ரம் போல அமைக்கப்பட்டது. முந்தைய காலத்தில் இந்த கோயில் தாந்திரீக பூஜை மற்றும் வழிபாட்டின் முக்கிய மையமாக இருந்தது என்று நம்பப்படுகிறது.
அதிசய கோயில்
இந்த கோயில் அமாவாசை நாளில் ஒரு பெரிய பக்தர்கள் கூட்டத்தை ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது.
அமாவாசை தினத்தில் சூரிய உதயத்தின் போது சூரிய கதிர்கள் இந்த ஆலயத்தின் மூலவராக அமைந்துள்ள மகாலட்சுமி தேவியின் பாதத்தில் விழுகிறது. பின்னர் மெல்ல மெல்ல லட்சுமி தேவியின் சிலை மீது சூரிய ஒளிபடுகிறது.
பல நிறங்கள் மாறும் அற்புதம் :
சூரிய ஒளியின் காரணமாக இந்த மகாலட்சுமி தேவி
காலையில் வெள்ளை நிறமாகவும்.
மதியத்தில் மஞ்சள் நிறமாகவும்,
மாலை நேரத்தில் நீல நிறமாகவும் மாறி காட்சி தருகிறது.
தற்போதுள்ள இந்த கோயில் ஒரு தசாப்தத்திற்கு முன்பு கட்டப்பட்டது.
மாதாமாதம் வரும் அமாவாசை தவிர, வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் அதிகமாக வந்து வணங்கி செல்கின்றனர்.இங்கு பிரார்த்தனை செய்பவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள் என்பது நம்பிக்கை.கோயில் பகல் முழுவதும் திறந்திருக்கும். இரவில் மூடப்படும்.
பிர்லா கோயில், போபால் கோயில்கள் மட்டுமல்லாமல், இந்த கோயிலும் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த கோயிலில் அருகில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பழமையான சிலைகள், பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.மகாலட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில், லக்ஷ்மி-நாராயணன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழகத்தில் இருக்கும் நிறம்மாறும் கோயில்: திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
தினமும் நிறம் மாறும் சிவலிங்கம் பல அதிசயங்களைக் கொண்ட திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்
பொன் நிறமாக இருக்கும் சிவலிங்கம், தினமும் வெவ்வேறு வேளைகளில் ஐந்து நிறங்களில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.
தாமிர நிறம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்க நிறம், நவரத்தின பச்சை என மாறி மாறி காட்சி தந்து அருள் தருவதால் இவருக்கு பஞ்சலிங்கேசர் என பெயர் பெற்றுள்ளார்.