×

தமிழகத்தின் ஆன்மீகப் பெருமை! முக்தி தரும் 7 சிவன் தலங்களில் 6 தமிழகத்தில்!

 

முக்தி தரும் சிவன் கோவில்கள் :

1. திருவாரூர் தியாகராஜர் கோவில் - திருவாரூரில் பிறந்தாலே முக்தி.
2. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் - காஞ்சிபுரத்தில் வாழ்ந்தால் முக்தி.
3. வாரணாசி காசி விஸ்வநாதர் கோவில் - காசியில் இறந்தால் முக்தி.
4. சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில் - சிதம்பரத்திற்கு வந்து தரிசித்தால் முக்தி
5. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் - கோவில் பெயரை திருஆலவாய் என சொன்னாலே முக்தி
6. அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் - இந்த கோவிலின் பெயரை கேட்டாலே முக்தி கிடைக்கும்.
7. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் - திருவண்ணாமலையை மனதால் நினைத்தாலே முக்தி கிடைக்கும்.

இந்த ஏழு தலங்களும் முக்தியை தருவதால் இவற்றை சப்த முக்தி தலங்கள் என்றும் சைவ சமயம் போற்றுகிறது. இவற்றில் காசி விஸ்வநாதர் ஆலயம் தவிர மற்ற ஆறு கோவில்களும் தமிழகத்தில் உள்ளது. அது மட்டுமல்ல உலகின் முதல் சிவன் கோவில் என போற்றப்படும் திருஉத்திரகோசமங்கை, தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் தான் உள்ளது. அதோடு பிரளய காலத்தில் உலக உயிர்களை குடத்தில் மறைத்து வைத்து, மீண்டும் உலகத்தை ஈசன் உருவாக்கியதாக சொல்லப்படும் சிவன் ஆலயங்கள் அனைத்தும் கோவில் நகரம் என போற்றப்படும் கும்பகோணம் மற்றும் அதை சுற்றியே உள்ளன.